திருவெண்ணெய்நல்லூர், ஏப். 20 –
திருவெண்ணெய்நல்லூர் நகரத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு அவர் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களையும், திமுக அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார். மேலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் எடுத்து கூறி மெய்கண்டார் திடலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ, சூர்யா கல்வி குழுமம் தலைவர் விசாலாட்சி பொன்முடி, முன்னாள் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் டாக்டர் அசோக் சிகாமணி, நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர்.விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



