தருமபுரி, ஏப். 18 –
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி மாவட்ட சட்டமன்ற தொகுதியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன தருமபுரியில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி :
மோடி அரசு மகளிருக்கு இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு மசோத தாக்கல் செய்கிறது. 3 ல் இரண்டு பங்கு மெஜாரிட்டி இருந்தால் தான் மசோதா நிறைவேறும். நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இப்போதே நிறைவேற்றட்டும்.
தமிழ்நாட்டிற்கு தொகுதி குறையாது என்று அமித்ஷா கூறுகிறார். ஆனால் சட்ட ரீதியாக கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன், அரசியல் கட்சிகளுடன் பிஜேபி அரசு விவாதிக்க விரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வரும் சூழலிலும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி நகல் எரித்து போராட்டம் செய்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லை. அதிமுக என்ற தனி கட்சியே தேவையில்லை.
தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு துரோகம் இழைத்து வருகிறது அதிமுக. எனவே பிஜேபி அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி. ஊழல் வழக்கில் இருந்து விடுபடவே அன்புமணி பிஜேபி கூட்டணியில் உள்ளார். அன்புமணி கட்சி தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். அன்புமணியை வளர்த்து சொகுசாக தலைவர் ஆக்கிய தனது தந்தையையே ஒதுக்கிவைத்து விட்டார். மகன் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாமகவில் இருந்து பல தலைவர்களை வெளியேற்றினர். மகன் தந்தை பிரச்சனைக்கு ஜி. கே. மணி தான் காரணம் என்று சொல்வது அபத்தமானது.
பிஜேபி-அதிமுக கொள்கை கோட்பாடற்ற சந்தர்ப்பவாத கூட்டணி. எனவே இந்த கூட்டணியை மக்கள் தோற்படிப்பார்கள். திமுக கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என பேசினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம் பரிதி ஆகியோர் உள்ளனர்.



