By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரி

மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி

Last updated: October 4, 2025 3:51 pm
October 4, 2025
24 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 4 –

மத்திய அரசின் ஸ்வஸத் நரி சஹாக்த் பரிவார் அபியான் நிகழ்ச்சியை முன்னிட்டு மருங்கூர் பேரூராட்சி மற்றும் குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம், வளமான சமூகம் அமைய நடைபெற்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியினை சென்னை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் தம்பரசி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது கூறியதாவது: பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நமது உடலினை ஆண்டுக்கு இருமுறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக சுகர், ரத்த அழுத்தம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். முறையான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். நோய் வருவதற்கு முன்பே அதனை தடுத்து உடலை பாதுகாக்க வேண்டும். நோயினை கண்டு பிடித்து குணப்படுத்தாவிட்டால் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடும். குறிப்பாக மருத்துவர்களிடம் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் நாம் நோயிலிருந்து எளிதில் விடுபடலாம். நோய் அதிகரிக்கும் முன்பே மருத்துவர்களிடம் சென்று விட்டால் நாம் மட்டுமின்றி, குடும்ப உறவுகள் பாதுகாக்கப்படும். பொருளாதார பாதிப்புகள் ஏற்படாது. அதற்கேற்ப நமது உடல்நிலையை பராமரித்து வர வேண்டும்.

நோய்களுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலோ, நமது உடல் சாதரண நிலையிலிருந்து அசாதரண நிலை ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிட்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் காண்பிக்கக் கூடாது. நோயினை அலட்சியம் செய்யாமல் அதை வராமல் தடுப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்கள் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் காணப்பட்டால் அதற்குரிய மருத்துவர்களிடம் காண்பித்து முறையான சிகிட்சையினை ஆரம்பத்திலே எடுத்து விட வேண்டும். மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்களை ஆரம்பத்திலே கட்டுப்படுத்தி தடுக்க முடியும் என அவர் பேசினார்.

மருங்கூர் பேரூராட்சித் தலைவர் லெட்சுமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூர் கழகச் செயலாளர் சீனிவாசன், தோவாளை வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் வெங்கடேஷ், இரவிபுதூர் ஊராட்சி பொறுப்பாளர் செல்லம்பிள்ளை, முகாம்பிகா மருத்துவக் கல்லூரி பி.ஆர்.ஓ சூரஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது
பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரிவுனுடைய அமைப்பாளர்கள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி

April 9, 2025
33 Views
மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல்லில் குணம் இருதய மைய திறப்பு விழா
பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account