தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நகர கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி தலைமையில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தனர். பிறகு மாவட்ட கட்சி அலுவலகத்திலும், தருமபுரி நகர பேருந்து நிலையத்திலும், எம். ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அசோகன்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் அணி செயலாளர் சங்கர், தகடூர் விஜயன் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தருமபுரி நகர 24- வது வார்டு செயலாளர் மோகன் தலைமையில், நகரக் கழகச் செயலாளர் பூக்கடை ரவி முன்னிலையில், எம்.ஜி.ஆர். 108- வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹரிகரன், சின்னசாமி, கார்த்தி, முருகன், கணேசன், செல்வம், விஜய் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும்,மலர் தூவியும் மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



