சென்னை, ஏப்ரல் 03 –
ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜாக்சன் குழுமம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விளையாட்டுத் துறை நிர்வாகியுமான சௌரவ் கங்குலியை பிராண்ட் தூதராக அறிவித்துள்ளது.
80 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட ஜாக்சன் குழுமம், நம்பிக்கை, மீள்திறன் மற்றும் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய புத்தாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்திருக்கிறது.
ஆக்கபூர்வ மாற்றத்தை உறுதிசெய்யும் கங்குலியின் தலைமைத்துவப் பண்பு மற்றும் தர அளவுகோல்களை மறுவரையறை செய்யும் திறன் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ள இக்குழுமம், தனது குறிக்கோளுக்கு இணக்கமான பிராண்டு தூதராக கங்குலியை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இனி இந்த பிராண்டின் விளம்பரங்கள் மற்றும் முக்கியமான முன்முயற்சிகளில் சௌரவ் கங்குலி இடம்பெறுவார்.
கங்குலியின் நம்பகத்தன்மையானது, எங்கள் பிராண்டை மேலும் வலுப்படுத்தும். இந்தியா முழுவதிலும் மற்றும் உலக அளவிலும் எங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளைப் பரவலாக்குவதைத் துரிதப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார். அவர் மேலும் கூறுகையில், “துணைத் தலைவர் சந்தீப் குப்தா, துணைத் தலைவர் பிகேஷ் ஓக்ரா மற்றும் உலகளாவிய செயல்பாடுகளுக்கான தலைமைச் செயல் அதிகாரி ஜாக்சன் கிரீன் ஆகியோரை உள்ளடக்கிய வலுவான தலைமைத்துவக் குழு இக்குழுமத்தை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது,” என்றார்.
இது குறித்து சௌரவ் கங்குலி,தெரிவித்ததாவது:-“விநியோகிக்கப்படும் மின்சாரம், சூரிய ஆற்றல், பசுமை மூலக்கூறுகள் மற்றும் உள்கட்டமைப்பு (மின்சாரம், மெட்ரோ, சிவில் மற்றும் நீர்) உள்ளிட்ட முழு மதிப்புச் சங்கிலியிலும் ஜாக்சன் குழுமத்தின் தொலைநோக்குப் பார்வை, இந்தக் காலகட்டத்திற்கு மிகப் பொருத்தமானதாகவும் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் ஒரு தலைசிறந்த பிராண்டுடன் இணைந்து செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.



