திருச்சி, மார்ச் 24 –
திருச்சி காமராஜ் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (60) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.



