ஈரோடு, மார்ச் 9 –
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சென்னிமலை பேரூராட்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வார்டு எண்.3ல் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோவில் எதிர்புறத்தில் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளின் போது, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



