By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை

Last updated: January 8, 2026 7:10 pm
January 8, 2026
39 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 8 –

திற்பரப்பு, கோதையாற்றில் களியல் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த சில தினங்கள் முன்பு முதலை குட்டியின் வீடியோ வெளியானது. இதையடுத்து கடந்த 3 தினங்களில் மீண்டும் 2 வீடியோக்கள் என தற்போது வரையிலும் அப்பகுதி மக்களால் மூன்று வீடியோக்கள் எடுக்கப்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதுபோல களியல் வனத்துறையினருக்கும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டது.

இதையடுத்து கோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரும் உறுதி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரவு பகலாக முதலை நடமாட்டம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய டிரோன் மூலம் வனத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சம்பந்தப்பட்ட முதலை பதுங்கியதாக கூறப்பட்ட உறை கிணறு அமைந்துள்ள பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆற்றின் இரு கரைகளிலும் தலா ஒருவர் வீதம் முதலை வருகிறதா? அது எந்த பகுதியில் பதுங்கி உள்ளது? என்பதை கண்காணித்து வருகின்றனர். இதற்காக கேமராக்களும் படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரவிலும் வனவிலங்கு நடமாட்டத்தை கண்காணித்து புகைப்படங்கள் எடுக்கும் தெர்மல் இமேஜ் டிரான் மூலமும் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் வனத்துறையினர் உறை கிணறு அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்: தற்போது வரை முதலை தென்படவில்லை. அவை ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள செடி கொடிகளுக்குள் மறைந்திருக்கலாம். நேரம் செல்ல செல்ல வெயில் வந்ததும் செடி கொடிகளில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. ஆனால் கண்காணிப்பு பணியை தொடர்ந்து வருகிறோம். முதலை தென்பட்ட பின் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவல் துறை அனுமதி பெற்று தீயணைப்புத்துறை உள்ளிட்ட இதர துறை உதவியுடன் முதலை பிடிக்கப்படும் என்று கூறினார்கள்.

முதலை நடமாட்டம் பகுதியாக கூறப்படும் பகுதியில் கடையால் பேரூராட்சிக்கு சொந்தமான சுற்றுலா படகு துறையும், அதன் கீழ் பகுதியில் ஏராளமான மக்கள் வரும் சுற்றுலா பகுதியான திற்பரப்பு அருவி பகுதியும் உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோயிலுக்கு சொந்தமான குளத்தை சீரமைக்க
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

September 13, 2025
31 Views
மதுபான பார் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை
உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account