நாகர்கோவில், ஜன. 10 –
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் யூஜின் கிராஸ் (49). குமரி மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக இருந்தார். கடந்த நான்காம் தேதி காலையில் இவர் வேப்பமூடு – கோர்ட் சாலையில் உள்ள எஸ்எல்பி பள்ளி அருகே நடைபயிற்சியில் இருந்தார். அப்போது அதே ரோட்டில் வேகமாக வந்த டெம்போ வாகனம் ஒன்று யூஜின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பொது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த யூஜின் இன்று உயிரிழந்தார். யூஜின் கிராசுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.



