நாகர்கோவில், ஏப். 10 –
கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற பொதுத் பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகள் உடன் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க இந்த பணிகள் பணிகள் விடப்பட்டுள்ளன. குறிப்பாக ஏப்ரல் 9ஆம் தேதி காலை 6 மணி முதல் 10ஆம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் விளவங்கோட்டில் ரூ. 9 லட்சத்தி 97 ஆயிரத்து 600 ம், கன்னியாகுமரியில் ரூ. 2 லட்சத்து 52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி காலை வரை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ 71 லட்சத்து 98 ஆயிரத்து 380 ரூபாய் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


