சுசீந்திரம், மே 13 –
பறக்கை அருகே உள்ள புல்லுவிளை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ராதிகா (42) இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று (8-5-2026) இரவு ஏழு முப்பது மணி அளவில் திடீரென வீட்டில் கரண்ட் போய்விட்டது. உடனே ராதிகா வீட்டில் இருந்த மெழுகுவர்த்தியை எடுத்து கொளுத்தும் பொழுது எதிர்பாராத விதமாக ராதிகா துணியில் தீப்பிடித்தது.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இவரை மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த ராதிகா நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது தாயார் தங்கலெட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் சப்-இன்ஸ்பெக்டர் தனீஷ்லியோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


