தருமபுரி, மார்ச் 03 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட துணை தலைவர் சிவா மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஆத்துக்கொட்டாய், சின்னார் அணை, தொள்ளகாதனை ஆகிய நீர்த்தேக்கங்களில் சிக்கி டேம் கட்டினால் விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் அதிகமாக கிடைக்கும். நிலங்களின் விவசாயம் பெருகும் பல ஏக்கர் நிலங்கள் வளம் பெறும். எனவே மேற்கண்ட நீர் தேக்கங்களில் சிக் டேம் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் பாலக்கோடு நகரத்தில் தற்போது பஞ்சப்பள்ளி குடிநீர் வருகிறது. இந்த தண்ணீரால் பொதுமக்களுக்கு மூட்டு வலி, பல் தேய்மானம் ஏற்படுகிறது. அதனால் ஒகேனக்கல் குடிநீர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை கொல்பதூர் தூள் செட்டிய ஏரி தண்ணீர் திட்டம் நிறைவேற்றினால் நீர் பாசனம் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நன்மை அடைந்து கரும்பு உற்பத்தி அதிகமாகி தருமபுரி மாவட்ட பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பல இடங்கள் உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும்.
மேலும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை வைக்க வேண்டும். மணியக்காரன் கொட்டாய் ஜறுதலாவ் பஞ்சாயத்து உட்பட்ட நெடுஞ்சாலை அருகில் பெரிய ஏரியில் சிறுவர் பூங்கா படகை எல்லாம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைத்திட வேண்டும். இவ்வாறு சிவா மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளார். முனியப்பன், கமலாதித்தன், மஞ்சுநாத், சுசீந்திரன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.



