By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட பஸ்களில் தொடர் கைவரிசை: ஜாமினில் வந்த பெண்கள் விபரங்கள் சேகரிப்பு: 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட பஸ்களில் தொடர் கைவரிசை: ஜாமினில் வந்த பெண்கள் விபரங்கள் சேகரிப்பு: 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி மாவட்ட பஸ்களில் தொடர் கைவரிசை: ஜாமினில் வந்த பெண்கள் விபரங்கள் சேகரிப்பு: 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

Last updated: December 20, 2025 2:23 pm
December 20, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 20 –

குமரி மாவட்ட பஸ்களில் தொடர்ச்சியாக நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதை தொடர்ந்து, சிறையில் இருந்து ஜாமினில் வந்த பெண்கள் திருட்டு கும்பல்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பஸ்களில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. நாகர்கோவிலில் வயதான பெண்கள், குழந்தைகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. பெண் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தான் கைவரிசை காட்டி வருகின்றனர். ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள் விருதுநகர், மதுரை, சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

கையில் குழந்தைகளுடன் ஏரி கூட்ட நெரிசலில் இடிப்பது போல் நடித்து அருகில் நிற்கும் பெண்களிடம் குறிப்பாக வயதான பெண்களிடம் கைவரிசை காட்டி விடுவார்கள் என்பது தெரியவந்தது. இடையில் குறைந்திருந்த சம்பவம் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால், பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது மீண்டும் கைவரிசை காட்டி வருகின்றனர். சமீபத்தில் இரணியல் அருகே பஸ்ஸில் பெண் ஒருவரிடம் பர்ஸை திருடிவிட்டு தப்ப முயன்ற 3 பெண்களை போலீசார் பிடித்தனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணி ஆவார். இவர்கள் மீது புகார் எதுவும் இல்லாததால் இவர்களை போலீசார் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இதற்கிடையே தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நாகர்கோவிலில் செட்டிகுளம், பார்வதிபுரம், கோட்டார், வேப்ப மூடு, மணிமேடை பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான பெண்களின் புகைப்படங்களை தனியாக பிரித்து எடுத்து அதன் மூலம் விசாரணை நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் கைதான பெண்கள் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த சிலர்தான் மீண்டும் கைவரிசை காட்டி வருவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே பஸ்களில் திருட்டு சம்பவங்களில் கைதாகி ஜாமீனில் வந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் மருத்துவ துணை சார்ந்த படிப்புகள் நிறுவனம் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: கணவர் கும்பலாக வந்து தாக்குதல்
பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2024
96 Views
ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரி ஆண்டு விழா
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
தஞ்சாவூரில் யூத் ரெட் கிராஸ் சார்பில் அகில உலக ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கான அரசியல் பயிலரங்கம் கலந்தாய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account