மார்த்தாண்டம், பிப். 5 –
மார்த்தாண்டம் அருகே கீழப்பம்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (41). சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார். இவருக்கும் நெட்டியான் விளை பகுதி சேர்ந்த சிபு (35) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது மகேஷ் ஊருக்கு வந்துள்ளார். சம்பவ தினம் மகேஷ் நெட்டியான் விளையில் நிற்கும் போது அங்கு வந்த சிபு, அவர் நண்பர் சுஜின் மற்றும் கண்டால் தெரியும் ஒரு நபர் என 3 பேர் சேர்ந்து மகேஷ் இடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மகேஷ் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிபு, சுஜின் மற்றும் கண்டால் தெரியும் ஒருவரை தேடி வருகின்றனர்.


