குளச்சல், ஜனவரி 31 –
வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் +2 முடித்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கும் ஈசன்தங்கு என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் சுபாஷ் (26) என்பவருக்கும் கடந்த 28ம் தேதி அதே பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் சைல்டு லைன் மூலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஜெனிதா ஜாக்குலின் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அதிகாரி ஜெனிதா ஜாக்குலின் குளச்சல் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் திருமணம் செய்த வாலிபர், வாலிபரின் பெற்றோர், வாலிபரின் சகோதரன், சகோதரி மற்றும் உறவினரான சுதர்சன் மற்றும் சிறுமியின் தாய் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


