By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே அதிகாரிகள் உடந்தையுடன் மண் திருட்டு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே அதிகாரிகள் உடந்தையுடன் மண் திருட்டு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே அதிகாரிகள் உடந்தையுடன் மண் திருட்டு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்

Last updated: January 27, 2026 5:36 pm
January 27, 2026
72 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 27 –

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பீமனேரி பகுதியில் சிஎம்சி நகர் என ரியல் எஸ்டேட் நடத்தி வரும் நபர் அப்பகுதியில் இருந்த இந்து கோயிலை உடைத்து சிலைகளை திருடி சென்று விட்டு அப்பகுதியில் இருந்த மேடான மண் பகுதிகள் அனைத்தையும் எந்த அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக திருடி கடத்தி நெல் வயல்களில் மண்ணை கொட்டி பாசன கால்வாயை மூடி அராஜகம் செய்தும், தட்டிக் கேட்டவரை கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து ஏற்கனவே செய்தி வெளியானது.

அது தமிழக அரசின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் கனிமவள திருட்டுக்கு அதிக பட்ச அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உடனடியாக நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற தோவாளை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் எவ்வளவு கனிம வளம் திருடப்பட்டு உள்ளது என்று அளவீடு செய்யும் பணிகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த இந்து கோவில் ஒன்று முழுமையாக தரைமட்டம் ஆக்கப்பட்டு அதிலிருந்து சிலைகள் திருடப்பட்டு உள்ளது. தற்போது அப்பகுதியை ஆய்வு செய்து அளவீடு செய்யும் பணியை நடத்தி, தரைமட்டமான கோவில் இருந்த பகுதி மற்றும் அதிலிருந்து சிலைகள் திருடி எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக கோவில் இருந்த இடத்தின் புனித தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோயில் மற்றும் அதிலிருந்து சிலைகளை திருடியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையையும் துவங்கி உள்ளது.

ஆகவே அப்பகுதியில் இருந்து திருடப்பட்ட கனிம வளம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதிகப்படியான அபராதம் விதிப்பதோடு மூடப்பட்ட பாசன கால்வாயையும் மீட்பதோடு, தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோவில் இருந்த இடத்தின் புனிதத்தன்மையை காப்பாற்றும் பொருட்டும் அதில் உள்ள சிலைகளை மீட்டு அப்பகுதியில் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
தேசிய பேட்மின்டன் போட்டியில் குமரி பெண் தலைமை காவலருக்கு பதக்கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் 56 சதவீதம் நிறைவு
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு

January 7, 2026
45 Views
வெள்ளிச்சந்தை அருகே மினி பஸ் டிரைவர் தாக்கு; 9 பேர் மீது வழக்கு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதி; தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கினார்
மதுரை உசிலம்பட்டி அருகே சுற்றுச்சூழல் தினவிழா
பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account