புதுக்கடை, ஜன. 19 –
இந்துக்களின் அடிப்படை உரிமைகளை, நீதிமன்ற உத்தரவுகளை உதாசீதனப்படுத்தி இந்துக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றசாட்டை முன்வைத்து இந்து முன்னணி சார்பில் புதுக்கடை அருகே பைங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி சட்ட விரோதமாக ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி மதுரை கோட்டச் செயலாளர் பழனி பாலன் என்பவர் தலைமை வகித்தார். இதை அடுத்து பொது இடத்தில் ஒன்றுகூடி பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இடையூறு செய்ததாகவும், தொல்லை கொடுத்ததாகவும் புதுக்கடை போலீசார் 22 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 26 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.


