ஈரோடு, டிச. 9 –
ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பாக தொடுத்த வழக்கில் சட்ட ரீதியிலான வெற்றியை கொண்டாடும் விதமாக ஈரோடு பெருந்துறை சாலை பரிமளம் மஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பெரியமாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர், செயல் தலைவர் கைலாசபதி, சட்ட ஆலோசகர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் செங்கோட்டுவேல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயகணேசன், ஈரோடு மாவட்ட அனைத்த தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இராஜமாணிக்கம், V.V.நேஷனல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் செந்தில் முருகன், மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் C.K. சரஸ்வதி, ஈரோடு முதலியார் கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் தொழில் வர்த்தக பிரதிநிகள், ஆன்மிக அமைப்பினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மக்களின் தலையாய பிரச்சனையாக உள்ள போக்குவரத்து நெரிசலை பெரிதும் தீர்க்க உதவும் ஈரோடு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான ரயில் நிலையத்தையும் மீனாட்சி சுந்தரனார் சாலையையும் இணைக்கும் 80 அடி திட்டச் சாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை மீட்டு அங்கு ஆலயம் அமைத்திட வலியுறுத்துதல்
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆக்ரமிப்பில் உள்ள ஈரோடு மாநகர் மத்தியில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஈரோடு நகரம் அரசுப் புறம்போக்கு நிலத்தை மீட்டு அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு பிரம்மாண்டமாக ஆலயம் அமைத்திட போதுமான நிலத்தை ஒதுக்கித் தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 80 அடி திட்டச்சாலையை உடனடியாக அமைத்திட அரசு தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டி நுழைவுப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



