By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Last updated: January 9, 2026 7:34 pm
January 9, 2026
8 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜனவரி 9 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டையாபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்டபகுதிகளில் கடந்த 2024 – 2025 ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதமும் பெய்த அதிக கனமழையினால் மிளகாய், உள்ளி, கொத்தமல்லி, உளுந்து, பாசி போன்ற பயிர்கள் பெரிதளவு சேதம் ஏற்பட்டது.

சாகுபடி செய்த ஒரு விவசாயி எத்தனை ஏக்கர் பயிர் செய்து பாதிப்படைந்தாலும்,அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே வெள்ள நிவாரணம் வழங்கப்படும் எனதமிழக அரசு தெரிவிக்கின்றது, இந்த உச்ச வரம்பை தளர்த்தி பாதிப்படைந்த அனைத்து நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சி கிராமங்களுக்கும் கண்காணிப்பு கேமரா வேண்டும்.

2024 – 2025 இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டு பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக புதூர் பகுதி விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலைமறியல் போராட்டங்கள், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி புதூர் பகுதி விவசாயிகள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றாலும், தமிழக அரசு பெரிதாக விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் இன்று விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய நிலையில், 70- வதற்கும் மேற்பட்ட விவசாயிகள் புதூர் வேளாண்மை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்மைதுறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், அதிகாரிகளின் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் புதூர் வேளாண்மை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது குறிப்பிடப்பட்டிருந்த விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், தங்களின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்து, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புதூர் பகுதி விவசாயிகள் அனைவரும் புறக்கணிப்போம் என்று கோஷங்களை எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

தேசியத் தலைவர் திரைப்படம் வெளியீடு
வயிறு, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு மையம் திறப்பு விழா
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

உணவு வணிகர்களுக்கு உரிமம் இல்லாவிட்டால் வழக்கு பதிவு; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

July 12, 2025
27 Views
கொல்லங்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுவன் சாவு
சாய் கிருஷ்ணா பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா
வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு  ஆலோசனைக் கூட்டம்
கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account