மார்த்தாண்டம், டிசம்பர் 15 –
அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்தவர் வினிஸ்டன் (21). இவரது மனைவி சிம்னா (21). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி கணவன் மனைவியுடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து வினிஸ்டன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அக்டோபர் மாதம் 10ம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தை பார்க்க வந்த போது அவர்கள் வீட்டில் இல்லை. இது குறித்து விசாரித்த போது வினிஸ்டனின் தாயார் உடன் அவரது மனைவி மற்றும் குழந்தை சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக மனைவி குழந்தையை தேடியும் அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதை அடுத்து தற்போது ஆறுகாணி காவல் நிலையத்தில் வினிஸ்டன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


