களியக்காவிளை, டிச. 16 –
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தங்க நாற்கர சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த சாலையில் குமரி மாவட்டம் அதங்கோடு அருகே மடத்து விளையில் ஐயா நாராயண சுவாமி கோயில் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல அணுகு சாலை அமைக்க அப்பகுதியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதன் பயனாக கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஸ் குமார் முயற்சியால் அணுகு சாலை நில அளவை செய்து சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதனை அப்பகுதியை சார்ந்த தனி நபர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலையை ஆக்கிரமித்துள்ளார். ஆகவே மாவட்ட கலக்டர் அழகு மீனா அந்த இடத்தை பார்வையிட்டு மீண்டும் நில அளவை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் தாலுகா தாசில்தார் இராஜசேகரன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதங்கோடு கிராம நிர்வாக அதிகாரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லூயிசாள் , அதங்கோடு நகர காங்., கமிட்டி தலைவர் பிரமில் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர



