திருப்பூர் மாவட்டம், டிச. 11 –
குன்னத்தூர் காவல் நிலையத்தில் குட்கா வழக்குகளில் 2025 வருடம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 254 கிலோ கிராம் குட்கா பொருட்கள் நீதிமன்ற உத்தரவு படி தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு 09.12.2025 ஆம் தேதி இந்த வருடம் (2025) குன்னத்தூர் காவல் நிலையத்தில் குட்கா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 254 கிலோ கிராம் குட்காவை உத்துக்குளி நீதிமன்றம். காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உத்தரவு படி குன்னத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சுசீலா, குன்னத்தூர் டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊத்துக்குளி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி இளங்கோவன், குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் 8 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா முழுவதும் குன்னத்தூர் அருகில் உள்ள காட்டு பகுதியில் வைத்து தீயிலிட்டு முறைப்படி அழிக்கப்பட்டது.



