தருமபுரி, டிசம்பர் 02 –
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா தருமபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி வரவேற்றார்.
நூலகத்தின் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு ஆட்சியர் பாராட்டு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் ஒரு மாவட்ட மைய நூலகம், 9 முழு நேர கிளை நூலகங்கள், 27 கிளை நூலகங்கள், 69 ஊர் நூலகங்கள், 26 பகுதி நேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம், 3 சிறப்பு நூலகம் என மொத்தம் 133 நூலகங்கள் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.
இந்த நூலகங்களில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 8 ஆயிரத்து 213 ஆகும். 2 லட்சத்து 3 ஆயிரத்து 840 உறுப்பினர்களும், 3 , 853 புரவலர்களும், 15 கொடையாளர்களும் உள்ளனர். தற்போது வரை 15 லட்சத்து 28,968 வாசகங்கள் உள்ளனர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வாசகர் வட்டத் தலைவர் செந்தில், தலைமை ஆசிரியர்கள் பழனி, தமிழ் தாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.



