நாகர்கோவில், டிசம்பர். 6 –
பாபர் மசூதி இடிக்கப் பட்ட டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பு பூங்கா முன்பு இன்று கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மக பூப் ஜெய்லானி தலைமை வகித்தார். மாவட்ட, நகர, கிளை அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெல்லார்மின், நாகர்கோவில் கலாச்சார பள்ளியை சேர்ந்த இமாம் செய்யது அகமது ஸலபி, மாநில தலைமை பிரதிநிதி காதர் மைதீன், தலைமை நிர்வாக்குழு உறுப்பினர் ஜோசப் நெலஸ்கோ, மாநில தலைமை பிரதிநிதி ஆஷாத், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் அகமது உசேன், அருணாச்சலம் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவை கிளை தலைவர் செய்யது அலி நன்றி கூறினார்.



