தென்காசி,
தென்காசி மாவட்டம் ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,127 பயனாளிகளுக்கு ரூ.44 கோடியே 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் ரூ.6 கோடியே 2 லட்சம் மதிப்பிலான 32 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்ததுடன் ரூ.55 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 185 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலை குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



