சங்கரன்கோவில், டிச. 4 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உணவகத்தினை நடத்தப்படும் மதி சிறுதானிய உணவகத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் திறந்து வைத்து தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு விதமான முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சங்கரன்கோவில் வட்டாரத்தில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கல்லூரியில் மற்றும் பார்வையாளர்களுக்கு சத்தான சிறு தானியங்களை சார்ந்த உணவுகளை வழங்கும்பொருட்டு, கல்லூரி வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிலையான வருவாய் ஏற்படுத்திடவும், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும். ஆகவே, அனைவரும் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருந்திடவேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்வில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மகளிர் திட்ட இயக்குநர் மதி இந்திரா ப்ரியதர்ஷினி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மாரீஸ்வரன், கல்லூரி முதல்வர் (பொ) வேணுகோபால், திமுக நகர செயலாளர் பிரகாஷ், ஐ டி விங்க் சிவசங்கரநாராயணன் மற்றும் பாலாஜி, ஜான்சன், பாரதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், மகளீர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



