விளாத்திகுளம், ஜூலை 06 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் அலுவலர்களை அழைத்து விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் இரவு காவலர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் மற்றும் கேமரா பதிவுகளை தங்களுடைய மொபைல் போனில் கண்காணிக்க வழிவகை செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய சங்கங்களில் உள்ள பட்டா புத்தகத்தில் காவல்துறையினர் தினமும் வந்து கையொப்பம் செய்கிறார்களா என்பதை கண்காணித்து கையொப்பம் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சூரங்குடி ஆய்வாளர் சுதாகர், உதவி ஆய்வாளர்கள் நாராயணன், செந்தில் வேல்முருகன், காவல்துறையினர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



