தஞ்சாவூர், நவம்பர் 26 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர்கள் மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் வரிசையில் புலவர் இறை குருவனாரும் ஒருவர் அவரது நினைவேந்தலுக்குப் பின் அவரது படைப்புகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், இறைகுருவனாரின் மகளுமான அங்கயற்கண்ணி – திருமலை தமிழரசனின் இறையகம் பதிப்பகமும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளர் தமிழ் ப்புலத்தின் அகராதியியல் துணை தலைவர் ஜாக்குலின் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். கருத்தரங்குகளை முரசொலி எம்பி தொடங்கி வைத்து பேசினார்.
காலையில் நடந்த அமர்வில் மாணவர் அமைப்பு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தமிழரண், நான் ஒரு ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தமிழ் இயலன், உலக தமிழாராட்சி நிறுவன சுவடியியல் புல இணை பேராசிரியர் தாமரை பாண்டியன் சூலூர் பாவேந்தர் பேரவையின் நிறுவுனர் செந்தலை கவுதமன் ஆகியோர் பேசினர்.
மதிய அமர்வில் குறிஞ்சி வேந்தன் தலைமையில் இணைப் பேராசிரியர்கள் ஜாக்குலின், தியாகராஜன் மற்றும் புதுவை அருங்காட்சியக இயக்குனர் அறிவன், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத் தலைவர் நல்லூர் சரவணன் ஆகியோரும், மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா ஆகியோரும் பேசினர். இதில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



