தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா எம். காளியப்பன் அர்ச்சகர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் ஏ. கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்,எஸ். பி. வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர். எம். பரமேஸ்வரி முத்து ஒன்றிய கவுன்சிலர் தடங்கம், எம். முத்தன் பூசாரி, எம். சின்னசாமி, எம்.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டை ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் நிர்வாகம், ஊர் பொதுமக்கள் மற்றும் புதிய இந்தியன் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.



