சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன் அசோசியேஷன் பொதுக்கூட்டம் சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீகாமகோடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம் பெஞ்சமின் தலைமையில் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் ப்ரொஜெக்டர் மூலம் எலக்ட்ரானிக்ஸ் பழுதுபார்க்கும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னிலையில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அதில் முதல் தீர்மானமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்னணு தொழிலாளர் நலவாரிய செயலாளர் ஜோஸ் டென்சின் குரூஸ் என்பவர் நியமிக்கப்பட்டது. இரண்டாவது தீர்மானமாக ஒரு ஆண்டில் மூன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும். மூன்றாவது தீர்மானமாக அரசு மற்றும் தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யும் இடத்தில் நமது சங்கத்தில் உள்ள அனைவருக்கும் விசிட்டிங் டிரிப்ஸ் செல்ல ஏற்பாடு செய்யப்படும். நான்காவது தீர்மானமாக எக்ஸிபிஷன் சென்னை டிரேட் சென்டரில் நடைபெறும் எலக்ட்ரானிக்ஸ் ஐஓடி சோலார் மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சங்கத்தில் உள்ள அனைவரும் இலவசமாக பாஸ் வழங்கப்படும் ஐந்தாவது தீர்மானமாக பொருளாளர் சேதுராமன் ஏகமனதாக நியமிக்கப்படுகிறோம் இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் எம். பெஞ்சமின் தலைமை செயலாளர் டி.கபாலி, பொருளாளர் டி. ராஜசேகர் மாநிலத் துணை தலைவர் எஸ். பாபு ,சென்னை மண்டல தலைவர் பி. ஆர். கலைமன்னன் சென்னை மண்டல செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் சென்னை மண்டல பொருளாளர் பி.சேதுராமன் PRO பி.கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.



