மதுரை, நவம்பர் 14 –
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் பர்வீன் சுல்தானா தலைமை தாங்கினார். அல்-அமீன் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனியசாமி, மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் பங்கினை முதுதமிழ்ப் புலவர் ப.இராமதாசர் ஆகியோர் பங்கேற்றனர்.
விழா நிறைவில் உலகத் தமிழ்ச்சங்கம் சார்பாக வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை, உதவிப் பேராசிரியர் முனியசாமிக்கு அல்-அமீன் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஷேக்நபி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.



