புதுக்கடை, மார்ச் 31 –
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷிபு (38). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு 2018-ல் இந்துஜா (30) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் இவானி என்ற மகளும், 6 வயதில் ஸ்வானிக் என்ற ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஷிபு வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை. இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ஷிபு புதுக்கடை போலீசில் மனைவியை கண்டுபிடிக்க கேட்டு புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து மாயமான இந்துஜாவை தேடி வருகின்றனர்.


