தஞ்சாவூர், ஜூன் 12 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் அதனை பின் தொடர்ந்து வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரேவதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவசெல்வம், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்) ஆனந்த், (சமூக பாதுகாப்பு திட்டம்) நடராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



