ஈரோடு மார்ச் 31
மனித பற்று சகோதரத்துவம் கருணை ஈகை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் ரம்லான் பெருநாளை யொட்டி விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க பெருவிழா ஈரோடு தண்ணீர் பந்தல் பாளையத்தில் நடந்தது.
இதையொட்டி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 500 பேருக்கு பிரியாணி அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தமிழி ன்பன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியை பொது செயலாளர் தீனாபாய் தொடங்கி வைத்தார். மாநகர செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். நிர்வாகிகள் நடராசு மயில் சாமி அங்கப்பன்
திலீப் ரகுமத்துல்லா பழனியம்மாள் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் அப்துல்லா நன்றி கூறினார்.



