ஈரோடு, ஆக. 22 –
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் சூர்யா அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் மாதிரி தேர்வும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் பயிற்சி வகுப்புகள் நடை பெற உள்ளது. அதை தொடர்ந்து அடுத்த 2 வார ஞாயிற்றுக்கிழமைகளில் (31, செப்.7 ந் தேதி) இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இலவச பயிற்சி வகுப்புகள் முடிந்த பிறகு 14-ம் தேதி மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
இடம் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஒரு நாளுக்கு முன்பாக தகவல் தெரிவிக்கப்படும். இந்த வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முகாம் நடைபெறும் இடம் ஒவ்வொரு வகுப்பிற்கு முந்தைய நாள் பதிவு செய்து உள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
அதன்படி முதல் பயிற்சி வகுப்பு வருகிற 24 ந் தேதி ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில்
அடுத்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
இந்த தகவலை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.



