சென்னை, நவ. 07 –
வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலம் சார்பில் “ஒரு மரம், ஒரு மாணவன், நாளைய பசுமை” என்ற தலைப்பில் பொது உறவு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கர்னல் டாக்டர். வேல் ஆர். ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிறுவனர் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன் மற்றும் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர். ராஜ் குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீடியா தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல் பாடசாலையின் டீன் மற்றும் பேராசிரியர்
டாக்டர். ஈ. சுரேஷ்பால் வரவேற்புரையை வழங்க ஊடகம் மற்றும் காட்சித் தொடர்பியல் புலத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர். எம். சரவணன் வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக ட்ரீம் கலம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் சங்கர் ஜெயகோபால் கலந்து கொண்டு மாணவர்களிடம் ஊக்கமூட்டும் வகையில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் இறுதி ஆண்டு மாணவர்கள் யஷ்வந்த், ரம்யா, யோகித், பாஸ்கர், ராகவன், சேந்தன் குமார் ஆகியோரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலாண்மை துறை தலைவர் ஜயபால் உள்ளிட்ட துறை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவாக சங்கர் ஜெயகோபால் கல்லூரி மாணவர்களுக்கு சுமார் 300 மரக்கன்றுகள் வழங்க, அதை கல்லூரி வளாகத்தில் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.



