தஞ்சாவூர், அக்டோபர் 31 –
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை முரசொலி எம்பி வழங்கினார். தஞ்சாவூர் கலைஞர் நூலக வாசகர் வட்டம் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லூரிகளில் உயர்கல்வியில் தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. அதன்படி பேச்சு போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களு க்கு முரசொலி எம்பி நேரடியாக சென்று பரிசு தொகை, பாராட்டு கேடயம், பாராட்டு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதன்படி முதல் கட்டமாக போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி பான் செக்கர்ஸ் மகளீர் கல்லூரியில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பரிசு தொகை பாராட்டு கேடயம் பதக்கம் மற்றும் சான்றிதழையும் பேச்சு போட்டியில் பங்கு பெற்ற 200 மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதலை முரசொலி எம்பி வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் விக்டோரியா மற்றும் தமிழ் துறை பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முரசொலி எம்பி கூறுகையில்: தமிழக முதலமைச்சரின் நல்லாட்சியில் உயர்கல்வில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி கல்லூரி அளவில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கல்லூரியிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசு தொகைகள் அமைச்சர் முன்னிலையில் வழங்கப்படும். மாணவர்களின் பேச்சுத்திறனை காணும் போது உயர்கல்வியில் தமிழ்நாடு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது என்றார்.



