தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பி. அக்ரகாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.விழா குழு சார்பில் ஆடு, கோழிகளை பலியிட்டு முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். இந்த விழாவில் தருமபுரி, கிருஷ்ணரி, சேலம் மாவட்டங்கள் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கு இந்து அறநிலை துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



