நாகர்கோவில், அக். 22 –
சாலையில் ஒருவர் அடிபட்டு கிடந்தாலே அவரைக் காப்பாற்றுவதற்கு பதில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு வரும் பொதுமக்கள் மத்தியில் ஒரு கன்று குட்டிக்கு அடிபட்டு கிடப்பதை பார்த்தும் பார்க்காதது போல் போகாமல் உடனடியாக சாலையில் இறங்கி அதனை மீட்டு தனது பாதுகாவலர்கள் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயமிக்க செயலை செய்தவர் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின்.
பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக தினந்தோறும் 12 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு வாங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்தப் புகார்களை அனுப்பி வைத்து அது சம்பந்தமான விசாரணைகளை துரிதமாக நடத்த உத்தரவிட்டு தீர்வு காண்பதால் பொதுமக்களால் மனுநீதிச் சோழன் எனப் போற்றப்படுபவர் எஸ் பி ஸ்டாலின் ஆவார்.
இவர் நேற்று ரோந்து பணிகளை பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் ஒரு பசு கன்று குட்டி வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்ட அவர் மாடு தானே அடிபட்டு கிடக்கிறது என்று பாராமல் உடனடியாக வாகனத்தை நிறுத்தி அடிபட்ட கன்று குட்டிக்கு முதலுதவி செய்து தனது பாதுகாவலர்கள் வாகனத்தில் அதனை ஏற்றி அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உதவி செய்யும் ஒரு மனிதநேயமிக்க மருத்துவர் என்பதை மீண்டும் தனது செயலால் நிரூபித்திருக்கிறார். இவரின் இத்தகைய செயலை பார்க்கும் போது ஒரு பசு, தன் கன்று இறந்த துயரத்தால், சோழ மன்னன் மனுநீதி சோழனின் கோபுரத்தில் உள்ள மணி அடித்து, நீதி கேட்கிறது.பசுவின் கதையை பொறுமையுடன் கேட்டு, ஒரு பசுவின் கன்று இறப்பிற்கு ஒரு தாய் மாடு நீதி கேட்டதால் ஒரு தாய்க்கும் அதன் குழந்தைகளுக்கும் உள்ள உறவை உணர்ந்து, தன் மகன் உதித்தன் மீது தேரை ஏற்றி மிதித்து, நியாயமான தீர்ப்பை வழங்கினான். இதன் மூலம், நீதி வழுவாமல் ஆட்சி செய்தான் என்ற வரலாற்று நீதி கதை நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு விபத்து நடந்தால் நமக்கு என்ன என்று திரும்பி பார்க்காமல் செல்லும் இந்த உலகத்தில் ஒரே கன்றுக்கு அடிபட்டதை கூட பெரிதாக நினைத்து உடனடியாக உதவி செய்யும் பணியில் ஈடுபட்ட மருத்துவர் எஸ் பி ஸ்டாலின் மற்றும் அவரது பாதுகாவலர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.



