சென்னை, மே 25 –
சென்னை மத்திய தெற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 116 (பி) வட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக மாண்புமிகு தளபதி விஜய் முதலமைச்சராக பதவியேற்பை கொண்டாடும் விதமாக திருவல்லிக்கேணி பஸ் நிறுத்தம் அருகில் 200 பேருக்கு அன்பு விருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மத்திய தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.திலீப்குமார் கலந்து கொண்டார். திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் பி.கௌதம் சுந்தர், 116 (பி) வட்ட கழக நிர்வாகி சி.டி.பார்த்தசாரதி முன்னிலையிலும் தவெகவின் செயல்வீரர்கள் ஏ.ராஜசேகர், எஸ்.பிரகாஷ், ஆர்.மோகன் ஆகியோரின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற அன்பு விருந்து நிகழ்ச்சியில் கார்த்திக், மணிகண்டன், ராஜசேகர், குமரன், முக்கேஷ், விஜி, ஹேமாத்திரி, சத்யா, துரை, சந்திரசேகர், அஸ்வினி, ஆர்.வர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



