சங்கரன்கோவில், அக்டோபர் 06 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் சேந்தமரம் மஜ்ரா ஊராட்சி கடம்பன்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5.5 லட்சம் மதிப்பீட்டில் வடகாசி அம்மன் கோவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கிளை கழகச் செயலாளர் சிவசக்தி, வேல்சாமி, முருகன், கோமதி, ராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ஸ்ரீமகேஷ், டிடிசி ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெள்ளத்துரை, மகளிர் அணி பெல்ஸ், ஒன்றிய பிரதிநிதி தினேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு, அகஸ்டின், முத்தமிழ், ஊராட்சி மன்ற தலைவர் செண்பககனி, ரவி, சேர்ந்தமரம் கிளைச் செயலாளர் செல்வராஜ், சீனிவாசன் மற்றும் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



