காவேரிப்பட்டணம், செப். 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கி, மத்திய ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் தமிழக அரசின் சிறப்பு மிக்க திட்டங்களின் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
திம்மாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில், அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் இந்த முகாமில் திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைபட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. நிகழ்சியில் ஒன்றிய துணை செயலாளர் அம்முபழனி, ஒன்றிய பொறியாளர்அணி அமைப்பாளர் சங்கர், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகன், துணை அமைப்பாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி பெருமாள், உள்ளிட்ட அனைத்து துறைவாரிய அலுவர்களும் மற்றும் ஊராட்சி கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். நிகழ்சியின் முடிவில் ஊராட்சி செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.



