கிருஷ்ணகிரி செப் 17:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்குட்பட்ட சுண்டேகுப்ப ஊராட்சி, செட்டிமாரம்பட்டியை அடுத்த தோட்டிப்பாறை கிராமத்தில் ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் பந்தக்கால் நடுதல், விக்னேஸ்வரி பூஜை, முளைப்பாரி இடுதல், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாம் நாளில் விநாயகர் வழிபாடு, தேவதா அனுக்கிரகஞ, புண்ணிய வாசனை, கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், கொடியேற்றுதல், தீபாராதனை, உள்ளிட்ட நிகழ்வுகளும் மூன்றாம் நாள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் அழைத்து வருதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றன. பின்னர் முதல் கால யாக பூஜை, மண்டப அர்ச்சனை, வேதிகைய அர்ச்சனை, தத்துவ வேதபாரண்யம், ருத்ர பாராயணம், மூல மந்திர ஹோமம், திரவிய பூர்ணாகதி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக மங்கள இசை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம், கணபதி ஹோமம், உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ ஜான் ஜருகமுனியப்பனுக்கு கலச அபிஷேகம் செய்து கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனை, நடைபெற்றன. இந்த மகா கும்பாபிஷே நிகழ்ச்சியை தோட்டிப்பாறை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக 1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண காவேரிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.



