திருவெண்ணெய்நல்லூர், செப். 16 –
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் திமுக கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துலங்கம்பட்டு கிராமத்தில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆணைக்கிணங்க, மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் ஏ.ஜெ. மணிக்கண்ணன் எம்.எல்.ஏ ஆலோசனை பேரில் ஒன்றிய செயலாளர் மா. சந்திரசேகரன் வழிகாட்டுதல் படி துலங்கம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளை செயலாளர் முருகன் ஏற்பாட்டில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணாவின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது “ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” எனும் தலைப்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆனைவாரி ஊராட்சி மன்றத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பைரவா கண்ணன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



