பளுகல், செப். 5 –
காப்புக்காடு அருகே கொடுவனந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆட்டோ டிரைவர். இவரது மகன் அகின் (22). ஐடிஐ முடித்துள்ளார். இன்று அகின் தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான பைக்கில் காரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சை வரும் உறவினர் ஒருவரை பார்க்க சென்றார். மத்தம்பாலை என்ற பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதி அகின் பலத்த காயமடைந்தார்.
அந்த வழியாக வந்தவர்கள் அகினை மீட்டு காரக்கோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அகின் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். விபத்து குறித்து ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில் பைக்கை ஒட்டி வந்த சிவகுமார் என்பவர் மீது பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


