நாகர்கோவில், செப். 18 –
இந்திய தபால் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் தபால் துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி இன்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் தலைமையில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு முன்பாக நாகர்கோவில் எஸ் டி இந்து கல்லூரியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தாணம்மாள் மற்றும் மாணவ, மாணவியர்கள் தூய்மை சம்பந்தமாக விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடத்தினர். நிகழ்ச்சியில் அஞ்சலக ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



