சுசீந்திரம்.பிப்.1
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை மது சூதனப்பெருமாள் கோவில் பங்குனி பெருந் திருவிழா வருடம் தோறும் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்காக நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் பின்பு கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து காலை 9:30 மணி அளவில் கொடியேற்று நடைபெற்றது தொடர்ந்து காலை மாலை வேலைகளில் சுவாமி வாகனப்பவனியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது9 திருவிழாவான 9 ம் தேதி காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் அமர செய்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது 10 ம் திருவிழா அன்று மாலை 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் பழனி குமார் அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பெருமாள் பக்தர்கள் ஊர் பொதுமக்கள்இணைந்து செய்து வருகின்றனர்



