தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 76 – வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டார். பின்னர் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளியின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் கௌரவக்குமார், தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும் மற்றும் அரசு துறையினருக்கும் சான்றிதழ்களையும், பொதுமக்களுக்கு ரூ 5 லட்சம் மதிப்பீட்டில்நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.



