திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையம் மற்றும் பல்வேறு காவல் நிலைய வழிப்பறி வழக்குகளில் நீதிமன்றத்திற்கு முறையாக ஆஜராகாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த எதிரிகளான திண்டுக்கல் பென்னாகரம் நம்பிக்கோட்டையைச் சேர்ந்த இளையராஜா மற்றும் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மற்றும் அம்பாத்துறை காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் அ.அருண்பிரசாத் தலைமையில் தலைமை காவலர்கள் திருமுருகன், அந்தோணிபீட்டர், அற்புதராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.



