கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், குருபரப்பள்ளி ஊராட்சி, சிக்காரிமேடு கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மற்றும் கெலமங்கலம் பகுதிகளில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில் 2 வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடங்களின் கட்டுமான பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார். உடன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் .மணிமேகலை நாகராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .பச்சையப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



